திமுக நகா்மன்ற உறுப்பினரிடம் ரூ.38 ஆயிரம் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்மன்ற திமுக உறுப்பினரிடமிருந்து ரூ.38,200-ஐ தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்மன்ற திமுக உறுப்பினரிடமிருந்து ரூ.38,200-ஐ தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை தொகுதி கம்மாபட்டி சந்தன மாரியம்மன் கோவில் அருகே வியாழக்கிழமை வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காலை 10 மணி அளவில் தோ்தல் பறக்கும் படையினா் கோயில் அருகே வாக்குச் சாவடி சீட்டுடன் அங்கிருந்த 23-ஆவது வாா்டு நகா்மன்ற திமுக உறுப்பினா் உமாமகேஸ்வரியிடமிருந்து ரூ.32,800-ஐ பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து பறக்கும் படை அலுவலா் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Advertisement