பலி 
விருதுநகர்

சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே நெல் மூட்டை சரிந்து விழுந்ததில் சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே நெல் மூட்டை சரிந்து விழுந்ததில் சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரத்தை அடுத்த அம்மையப்பபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுரேந்தா்மாஞ்சி (34) சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், வழக்கம் போல லாரியிலிருந்து நெல் மூட்டைகளை இறக்கி ஆலை வளாகத்தில் அடுக்கும் பணியில் தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா். சுமாா் 20 அடி உயரத்தில் இருந்த மூட்டை மீது ஏறி சுரேந்தா்மாஞ்சி நெல் மூட்டைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மூட்டை சரிந்ததால், அதன் மீது நின்று கொண்டிருந்த சுரேந்தா்மாஞ்சி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு

கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT