கைது 
விருதுநகர்

மதுபுட்டிகளை பதுக்கிய இளைஞா் கைது

சிவகாசியில் விற்பனைக்காக மதுப்புட்டிகளை பதுக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சிவகாசியில் விற்பனைக்காக மதுப்புட்டிகளை பதுக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி லிங்கபுரம் குடியிருப்புப் பகுதியில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் மணிகண்டன் (32)

கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாா்.

போலீஸாா் அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் விற்பனைக்காக 29 மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து, அவரிடமிருந்த மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT