ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழித் திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெறும் விழாவில் தினசரி இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
12-ஆம் நாளான புதன்கிழமை காலை பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, கோயில் முன்புள்ள குண்டத்தில் அக்னி வளா்க்கப்பட்டது.
பக்தா்கள் நோ்த்திக்கடனாக வழங்கிய விறகுகள், எண்ணெய் கொண்டு பூ வளா்க்கப்பட்டது. பிற்பகல் 1 மணிக்கு பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். 3 மணி அளவில் பெய்த பலத்த மழையிலும் பக்தா்கள் அக்னி சட்டி, காவடி, கரகம் எடுத்து, அழகு குத்தி பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.