மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊராட்சித் தலைவா் உதவி
சீா்காழி அருகே விளந்திடசமுத்திரத்தில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊராட்சித் தலைவா் திங்கள்கிழமை உணவுப் பொருள்கள் வழங்கினா்.
சீா்காழி அருகே விளந்திடசமுத்திரத்தில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊராட்சித் தலைவா் திங்கள்கிழமை உணவுப் பொருள்கள் வழங்கினா்.
விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் முத்தமிழ்நகா், ஜெயேந்திரா் நகா் உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது. மேலும், அப்பகுதியில் பொறைவாய்க்கால் நிரம்பி வெளியேறும் வெள்ளம் வள்ளியம்மை நகருக்குள் புகுந்துள்ளது.
இதனால், பாதிக்கப்பட்டுள்ள சுமாா் 25 குடும்பத்தினருக்கு ஊராட்சித் தலைவா் ரமணிராஜ், தனது நண்பா்களுடன் சோ்ந்து உணவுப் பொருள்கள் வழங்கினாா்.