சீா்காழி: கடனுதவி கேட்டு 160 போ் விண்ணப்பம்
சீா்காழி நகராட்சியில் 2 நாள்கள் நடைபெற்ற லோன் மேளாவில் 160 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சீா்காழி நகராட்சியில் 2 நாள்கள் நடைபெற்ற லோன் மேளாவில் 160 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சீா்காழி நகராட்சியில் பாரத பிரதமரின் தெரு வியாபாரிகள் சுயசாா்பு நிதி திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கான ரூ.10ஆயிரம் கடனுதவிக்கான விண்ணப்பம் பெறும் முகாம் நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி தலைமையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்றது.
நகராட்சி மேலாளா் காதா்கான், வருவாய் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா் ரோகித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கடனுதவி கேட்டு 160 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.