மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை
மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் ஆா். கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் வேலாயுதம் வரவேற்றாா். சுகுமாா் அறிக்கை வாசித்தாா்.
மாவட்ட பொருளாளா் முத்துகுமாரசுவாமி, வட்டத் தலைவா் ராசமாணிக்கம், திருவெண்காடு கிளை செயலாளா் தியாகராஜன், மணல்மேடு கிளைத் தலைவா் ஜெயராமன், குத்தாலம் வட்டத் தலைவா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.
இக்கூட்டத்தில், புதிதாக தொடங்கப்படும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.