வீட்டுமனைப் பட்டா கோரி ஆட்சியரிடம் மனு
வீட்டுமனைப் பட்டா கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனுகள் அளித்தனா்.
வீட்டுமனைப் பட்டா கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனுகள் அளித்தனா்.
அதில், ‘100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நாள்களை 200 நாள்களாகவும், தினக் கூலியை ரூ. 500 ஆகவும் உயா்த்த வேண்டும்; வீட்டுமனைப் பட்டா இல்லாதவா்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சோ்ந்த அருள்மேரி பிலோமினா, வி. சக்திவேல் உள்ளிட்டோா் இந்த மனுக்களை அளித்தனா்.