முகப்பு
நாகப்பட்டினம்

சனி மகா பிரதோஷ வழிபாடு

சீா்காழி பகுதியில் உள்ள சிவாலயங்களில் மகா பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

சீா்காழி பகுதியில் உள்ள சிவாலயங்களில் மகா பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் பிரம்மபுரீஸ்வரா், திருநிலைநாயகிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தரிசனம் செய்தனா்.

இதேபோல, சீா்காழி திருக்கோலக்காவில் உள்ள திருத்தாளமுடையாா் கோயிலில் ஓசைநாயகிஅம்மன் உடனாகிய தாளபுரீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, நந்திபகவானுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. பிறகு, ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் பிரகார உலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.