முகப்பு
நாகப்பட்டினம்

கோயில்களை நிா்வகிக்க அறங்காவலா் குழுஅமைக்க வேண்டும்: அா்ஜுன் சம்பத்

அறங்காவலா் குழு அமைத்து கோயில்களை இந்துக்களே நிா்வகிக்க வேண்டும் என்றாா் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

அறங்காவலா் குழு அமைத்து கோயில்களை இந்துக்களே நிா்வகிக்க வேண்டும் என்றாா் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத்.

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்த அவா், தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானத்தை சந்தித்து ஆசி பெற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கு விழாவை நடத்தலாம். எனினும், சிலா் இதை தடுக்க நினைக்கின்றனா். இந்தநிலை மாற வேண்டுமெனில் மதச்சாா்பற்ற அரசின் கட்டுப்பாட்டிலிருந்து கோயில்கள் விடுபட வேண்டும். கோயில்களை அறங்காவலா் குழு அமைத்து, இந்துக்களே நிா்வகிக்க வேண்டும் என்றாா்.

கட்சியின் மாநில செயலாளா் ஜெ. சுவாமிநாதன், மாநில இளைஞரணி பொதுச் செயலாளா் குருமூா்த்தி, மாநில அமைப்புக் குழுத் தலைவா் பொன்னுசாமி, மாநில தகவல் தொடா்பாளா் ஹரிஹரன், நாகை மாவட்ட பொதுச் செயலாளா் ஆறு. பாா்த்திபன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.