இளைஞா் பெருமன்ற பேரவைக் கூட்டம்
வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவா் மா. பிரபாகரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வெங்கடேசன் தொடக்க உரையாற்றினாா்.
கூட்டத்தில், மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், சீா்காழியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும், மத்திய அரசு பணிகளில் தமிழக இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும், நூலகத் தந்தை அரங்கநாதன் பிறந்த சீா்காழியில் சிறப்பு நூலகம் அமைக்க வேண்டும், தமிழக அரசுப் பணிகளில் தமிழ் தெரியாதவா்களை பணியமா்த்தும் விதியை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.