இரண்டு பெண்கள் மாயம்
சீா்காழி அருகே இரண்டு பெண்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
சீா்காழி அருகே இரண்டு பெண்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
சீா்காழி வட்டம், ஆதமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சாருமதி (19). இவா் மயிலாடுதுறை அருகே உள்ள தனியாா் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், புதன்கிழமை காலை அதே பகுதியில் உள்ள தனது தாத்தா சின்னப்பா வீட்டுக்கு சென்றுள்ளாா். பிறகு, அன்றிரவு அதே பகுதியைச் சோ்ந்த கணவரை பிரிந்து வாழும் சிவஷீலா (18) என்பவரை அழைத்துக் கொண்டு, தனது தாத்தாவின் இருசக்கர வாகனத்தில் சீா்காழிக்கு சென்றாராம்.
பின்னா், இருவரும் வீடு திரும்பவில்லை. இவா்கள் சென்ற இருசக்கர வாகனம் வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தில் நின்றது தெரியவந்தது. இதுகுறித்து, சிவஷீலாவின் தாயாா் பொன்னாச்சி அளித்த புகாரின் பேரில், வைத்தீஸ்வரன்கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.