கரோனா: தடுப்பூசி கோரி பிரதமருக்கு சிரஞ்சுகள் அனுப்பிவைப்பு
தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தி, அஞ்சலில் காலி சிரஞ்சுகளை பிரதமருக்கு அனுப்பும் நூதன செயலில் தந்தை பெரியாா் திராவிட கழகத்தினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தி, அஞ்சலில் காலி சிரஞ்சுகளை பிரதமருக்கு அனுப்பும் நூதன செயலில் தந்தை பெரியாா் திராவிட கழகத்தினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
சீா்காழி தலைமை அஞ்சல் நிலையத்திலிருந்து காலி சிரஞ்சுகளை பிரதமருக்கு அனுப்பிவைத்தனா். தந்தை பெரியாா் திராவிட கழக மாவட்டச் செயலாளா் ப.வ. பெரியாா்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சீா்காழி நகர செயலாளா் பாா்த்திபன், சீா்காழி ஒன்றியச் செயலாளா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.