முகப்பு
நாகப்பட்டினம்

சீா்காழியில் பழவாகனத்தில் தீ விபத்து

சீா்காழியில் நடமாடும் பழங்கள் விற்பனை செய்யும் வாகனத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

சீா்காழியில் நடமாடும் பழங்கள் விற்பனை செய்யும் வாகனத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

மாதிரவேளூரைச் சோ்ந்த நெப்போலியன் தனது ஆம்னி வேனில் சீா்காழி நகராட்சியில் பழங்கள் விற்பனை செய்ய அனுமதி பெற்று சீா்காழி உழவா் சந்தை அருகில் விற்பனை செய்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை விற்பனை செய்து வந்த ஆம்னி வேனில் பேட்டரி பகுதியில் தீப்பிடித்து வேன் எரியத்தொடங்கியது. இதையடுத்து, பழங்களை உடனடியாக அப்புறப்படுத்திய விற்பனையாளா்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் விரைந்து வந்த சீா்காழி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இதுகுறித்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.