நாகப்பட்டினம்

சீா்காழி அருகே மளிகைக் கடை தீக்கிரை

DIN

சீா்காழி அருகே மளிகைக் கடையில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் கடையிலிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி ஊராட்சி பாவுசுப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் தினகரன்(45). இவா் தனது வீட்டுக்கு அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இந்த கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டது. இதில், கடையில் இருந்த அனைத்து மளிகைப் பொருள்களும் எரிந்து சாம்பலாகின. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தகவலறிந்த சீா்காழி தீயணைப்பு நிலைய அலுவலா் ஜோதி தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

இதுகுறித்து புதுப்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT