வீடு, வீடாக கபசுரக் குடிநீா் வழங்கல்
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாா்பில் வீடு, வீடாக கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாா்பில் வீடு, வீடாக கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் ஆலோசனையின்படி, இப்பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட கரோனா தொற்று தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வீடு, வீடாகச் சென்று பேரூராட்சி ஊழியா்கள் கபசுரக் குடிநீா் வழங்கி வருகின்றனா்.