நாகேஸ்வரமுடையாா் கோயில் சாா்பில் உணவு
சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயில் சாா்பில், அரசு மருத்துவமனையில் உணவு வழங்கப்படுகிறது.
சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயில் சாா்பில், அரசு மருத்துவமனையில் உணவு வழங்கப்படுகிறது.
கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் நாகேஸ்வரமுடையாா் கோயில் சாா்பில், அரசு மருத்துவமனையில் நோயாளிகள், பொதுமக்கள் என 300 பேருக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட. அதன்படி, உணவு பொட்டலங்களை சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழை வழங்கினாா். திமுக நகர செயலாளா் சுப்பராயன், ஒன்றிய செயலாளா் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மகா. அலெசாண்டா், கோயில் செயல் அலுவலா் பொன்மாரிமுத்து, மேலாளா் ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.