பாஜகவினா் மீது வழக்குப்பதிவு
Updated On : 12 ஏப்ரல், 2024 at 7:59 PM
நாகையில் தோ்தல் பிரசாரத்தின்போது வெடிவெடித்ததில் 2 குடிசைகள் எரிந்து சேதமான வழக்கில் பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
நாகை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ரமேஷ் கோவிந்த் வெளிப்பாளையம் காடம்பாடி பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் செய்தபோது, வெடி வெடித்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த இரண்டு குடிசைகள் மீது தீப்பொறி பட்டு தீப்பிடித்தது.
இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள், ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் 8 பவுன் நகைகள் சேதமடைந்ததாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளா்கள் காவல்நிலையத்தில் புகாா் தெரிவித்தனா். வெளிப்பாளையம் போலீஸாா் இதுதொடா்பாக பாஜகவினா் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.
Advertisement