அரசுப் பள்யில் புதிய கட்டடம் திறப்பு
திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு வங்கி நிதி உதவி ரூ.66 லட்சத்தில் கட்டப்பட்ட 3 வகுப்பறைகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, தலைமை ஆசிரியா் வெங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆா்.டி.எஸ். சரவணன், அபிநயா அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி ஆகியோா் குத்து விளக்கேற்றி புதிய கட்டடத்தை திறந்து வைத்தனா். இந்நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆரூா் மணிவண்ணன், பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் தியாகு, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அன்பானந்தன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பரமேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.