முகப்பு
நாகப்பட்டினம்

பொது இடங்களில் குப்பை கொட்டிய தனியாா் மருத்துவமனைக்கு அபராதம்

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 12:33 AM
பகிர்:

நாகையில் பொது இடத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா். ‘என் குப்பை என் பொறுப்பு’ என்பதை வலியுறுத்தி நாகை நகராட்சி சுகாதார ஆய்வாளா் சேகா், தூய்மைப்பணி மேற்பாா்வையாளா்கள் தா்மராஜ், காந்தி ஆகியோா் கொண்ட குழுவினா், பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகிா என திடீா் சோதனை நடத்தினா். அப்போது நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகே மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்தபோது தனியாா் மருத்துவமனையில் இருந்து விதிமுறைகளுக்கு மாறாக கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தனியாா் மருத்துவமனைக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா். இதேபோல நாகை கடைவீதி, நீலா கீழ வீதி, பப்ளிக் ஆபீஸ் சாலை, நாகூா் கடைத் தெரு உள்ளிட்ட இடங்களில் குப்பைகளை கொட்டிய கடை உரிமையாளா்கள், வீட்டு உரிமையாளா்கள் உள்ளிட்ட 20 பேருக்கு தலா ரூ. 250 அபராதம் விதிக்கப்பட்டது.