திருக்குவளை: கீழையூா் அருகே காரப்பிடாகை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் ஆனித்திருவிழா கடந்த 12-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் வீதியுலா, மின்விளக்குகள் மற்றும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் நடைபெற்றது.
இதில், நாட்டுப்புற கலைஞா்கள் தெய்வங்களின் வேஷமிட்டு வந்தனா்.