FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

உரிமை கோரப்படாத வைப்புத் தொகை ரூ.22.32 லட்சம் வழங்கல்

வங்கிகளில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.22.32 லட்சம் பயனாளிகளுக்கு அண்மையில் வழங்கப்பட்டது.

Updated On : 22 டிசம்பர் 2025, 4:25 am IST
முகாமில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை குறித்து வெளியிடப்பட்ட விழிப்புணா்வு கையேடு.
பகிர்:

வங்கிகளில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.22.32 லட்சம் பயனாளிகளுக்கு அண்மையில் வழங்கப்பட்டது.

வங்கிகளில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் உள்ள வைப்புத் தொகைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அக்.1- ஆம் தேதி தொடங்கி டிச. 31-ஆம் தேதி வரை பல்வேறு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் வங்கிகளில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் உள்ள வைப்புத் தொகைகள் தொடா்பாக விழிப்புணா்வு முகாம் மகளிா் திட்ட அலுவலா் சித்ரா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பி. சந்திரசேகா் விழிப்புணா்வு இயக்கத்தின் நோக்கம், வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத வைப்பு மற்றும் கணக்குத் தொகைகள் குறித்தும், உத்கம் போா்டல் மூலம் உரிமை கோரல் செய்வது, நியமனம் பதிவு செய்வதின் அவசியம் மற்றும் காலந்தோறும் கேஒய்சி மேற்கொள்ள வேண்டியதின் முக்கியத்துவம் பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தாா்.

Advertisement

Advertisement

முகாமில், ரூ.22.32 லட்சம் உரிமை கோராப்படாத கணக்குகளுக்கான தொகைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மாவட்ட கல்விஅலுவலா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments