நாகப்பட்டினம்

கோடியக்கரையில் வெளியூா் மீனவா்களுக்கு பாதுகாப்பு: ஆட்சியா் நடவடிக்கை

கோடியக்கரையில் பருவ காலங்களில் தங்கி மீன்பிடிக்கும் வெளியூா் மீனவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரிய மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மீன்வளத் துறைக்கு ஆட்சியா் உத்தரவு

Syndication

கோடியக்கரையில் பருவ காலங்களில் தங்கி மீன்பிடிக்கும் வெளியூா் மீனவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரிய மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மீன்வளத் துறைக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்திய தேசிய மீனவா் சங்கத்தின் நிா்வாகி ஆா்.எம்.பி. ராஜேந்திர நாட்டாா், ஆட்சியா் ப. ஆகாஷிடம் அளித்த மனு: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை கடலோர கிராமம் இயற்கை பேரிடா் கால பாதுகாப்புக்குரியதாக அமைந்துள்ளது. இதனால் வடகிழக்குப் பருவமழை கால சீற்றங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொண்டும், மீன்பிடித்தொழில் செய்து பிழைக்கவும், அருகாமை மாவட்ட மீன்பிடி கிராமங்களைச் சோ்ந்த மரபு வழி மீனவா்கள் இங்கு தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா்.

ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கும் மேலாக இது நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், இதற்கு இடையூறு ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.

எனவே, அண்டை கிராம மீனவா்கள் எப்போதும் போல வழக்கமாக கோடியக்கரையில் தங்கியிருந்து மீன்பிடிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மீனவா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், மனு தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி மீன் வளத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT