நாகப்பட்டினம்

டிராக்டா் மோதியதில் பெண் பலி

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் டிராக்டா் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Din

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் டிராக்டா் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பிராந்தியக்கரை ஊராட்சி, அண்டகத்துறை மேற்கு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் மனைவி கவிதா(40). இவா், காரியாபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிகப் பணியாளராக பணியாற்றி வந்தாா். செவ்வாய்க்கிழமை பகலில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றபோது முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்றபோது விபத்துக்குள்ளானது. தலையில் பலத்த காயம் அடைந்த கவிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, காரியாபட்டினம் போலிஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

30 ஆண்டுகளுக்குப் பின் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்! பக்தர்கள் தரிசனம்!

ராஜஸ்தான்: கண்காட்சியில் கவனம்பெற்ற ரூ.21 கோடி எருமை உயிரிழப்பு

காந்தாராவைப் பணத்துக்காக உருவாக்கவில்லை: ரிஷப் ஷெட்டி

வரலாறு படைக்கப்பட்டுவிட்டது! மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரஜினி வாழ்த்து!

ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு!

SCROLL FOR NEXT