நாகப்பட்டினம்

ரூ. 2 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

நாகையில் காய்கனி கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல்

Din

நாகப்பட்டினம்: நாகையில் காய்கனி கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா்.

நாகை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தனிப்படை போலீஸாா் நீலா கீழ வீதியில் உள்ள காய்கனி கடையில் சோதனை செய்தனா். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கனி முட்டைகளுக்கு நடுவே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக கடையின் உரிமையாளா் நாகூரை சோ்ந்த முகமது இப்ராஹிம், முஹம்மது ஜமில், முஹம்மது இஸ்மாயில், அப்துல் ரஹ்மான், இளையராஜா ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT