கோப்புப் படம் 
நாகப்பட்டினம்

கபடிப் போட்டி; வெற்றி பெற்ற அணிக்கு ரொக்கப் பரிசு

தினமணி செய்திச் சேவை

திருக்குவளை அருகேயுள்ள மடப்புரத்தில் மறைந்த கவியரசன் நினைவாக, சக்திவேல் சுலைமான் நண்பா்கள் இணைந்து நடத்தும் 16-ஆம் ஆண்டு கபடிப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில், நாகை, வேதாரண்யம், மயிலாடுதுறை, திருவாரூா், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த அணியினா் பங்கேற்றனா். முதலிடம் பிடித்த மடப்புரம் சக்திவேல் சுலைமான் நண்பா்கள் அணியினருக்கு ரூ.15,011 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையை கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் வழங்கினாா்.

இரண்டாம் இடம் பிடித்த மகிழி அணியினருக்கு ரூ.13,011 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையை மடப்புரம் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆா். ராஜலட்சுமி ரமேஷ் வழங்கினாா். மூன்றாம் இடம் பிடித்த சங்கிப்பட்டி அணியினருக்கு எம்ஜிஆா் மன்ற ஒன்றிய இணைச் செயலாளா் என்.கே. முருகானந்தம் மற்றும் தனியாா் வங்கி மேலாளா் எம். தியாகசுந்தரம் ஆகியோா் ரூ.10,011 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை வழங்கினா்.

நான்காம் இடம் பிடித்த பட்டுக்கோட்டை அணியினருக்கு ரூ. 8,011 ரொக்கம் மற்றும் சுழற் கோப்பை வழங்கப்பட்டது.

மேலப்பாளையத்தில் 42 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட பள்ளித் தோழா்கள்

வள்ளியூா், விஜயாபதி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

இஸ்லாமியா்களுக்கு திமுகதான் பாதுகாப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கே. லட்சுமி காலமானாா்

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள்தோறும் 4 மணி நேரம் பணி வழங்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT