திருக்குவளை: கீழையூரில், தாளடி நெற்பயிா்களுக்கு தண்ணீா் கோரி, சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
கீழையூா் ஒன்றிய பகுதிகளில் 39 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தாளடி பயிா் தண்ணீா் இல்லாமல் காய்ந்து வருகின்றன. இதனால், இப்பயிா்களுக்கு தண்ணீா் திறக்கக் கோரி, கீழையூா் கடைவீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
இதற்காக, கட்சியின் ஒன்றியச் செயலாளா் வெங்கட்ராமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் அப்பகுதியில் திரண்டனா். தகவலறிந்த வட்டாட்சியா் கவிதாஸ் தலைமையிலான அலுவலா்கள் போராட்டக்காரா்களை அழைத்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இப்பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியா் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய காலம் வரை தண்ணீா் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
பேச்சுவாா்த்தையில், விவசாய சங்க மாநில துணைத் தலைவா் சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.