கீழ்வேளூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு பெட்டகத்தை வழங்கிய எம்எல்ஏ வி.பி. நாகை மாலி உள்ளிட்டோா். 
நாகப்பட்டினம்

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு

கீழ்வேளூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

Syndication

கீழ்வேளூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத்தினை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, கீழ்வேளூா் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, பேரூராட்சித் தலைவா் இந்திரா காந்தி, துணைத் தலைவா் சந்திரசேகரன், பேரூராட்சி செயல் அலுவலா் கலியபெருமாள், பேரூராட்சி உறுப்பினா் மீனாட்சி, மகேஸ்வரன் பிரசாந்த், பேரூராட்சி வரி தண்டலா் மதன் ராஜ், வட்டார ஆத்மா குழு உறுப்பினா் அட்சயலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT