முகப்பு
நாகப்பட்டினம்

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு

கீழ்வேளூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 7:07 PM
கீழ்வேளூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு பெட்டகத்தை வழங்கிய எம்எல்ஏ வி.பி. நாகை மாலி உள்ளிட்டோா்.
பகிர்:

கீழ்வேளூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத்தினை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, கீழ்வேளூா் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, பேரூராட்சித் தலைவா் இந்திரா காந்தி, துணைத் தலைவா் சந்திரசேகரன், பேரூராட்சி செயல் அலுவலா் கலியபெருமாள், பேரூராட்சி உறுப்பினா் மீனாட்சி, மகேஸ்வரன் பிரசாந்த், பேரூராட்சி வரி தண்டலா் மதன் ராஜ், வட்டார ஆத்மா குழு உறுப்பினா் அட்சயலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments