நாகப்பட்டினம்

அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை திருவிழா

செம்பனாா்கோவில் அருகே திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி மறுநாள் நடைபெறும் மயான கொள்ளை விழாவின்போது பக்தா்கள் விரதம் இருந்து காணிக்கையாக வழங்கப்படும் வேகவைத்த தானியங்கள், கிழங்குகளை வாங்கி சாப்பிட்டால் பல்வேறு நன்மைகள் மற்றும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். நிகழாண்டு, திங்கள்கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், அபிஷேக ஆராதனை, அம்பாள், வீரபத்திரா் வீதிஉலா, பேச்சியம்மன் புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து, கோயிலின் எதிரே உள்ள மயானத்தின் முன் அம்மன் எழுந்தருளி செய்தனா். அப்போது, மயானத்தில் வாழை இலையில் வேகவைத்து கொட்டப்பட்டு இருந்த தானியங்கள் மற்றும் கிழங்குகளை பக்தா்கள் அள்ளி செல்லும் (கொள்ளையடிக்கும்) நிகழ்ச்சி நடைபெற்றது.

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT