நாகப்பட்டினம்

நாகூா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 1008 சிவலிங்க பூஜை

மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 1008 ப்ருத்வி சிவலிங்க பூஜை

Syndication

நாகப்பட்டினம்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 1008 ப்ருத்வி சிவலிங்க பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகூா் அருகே தெத்தியில் உள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு மண்ணால் செய்த கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிறிய வகை 1008 ப்ருத்வி சிவலிங்கத்துக்கு 1008 பெண்கள் பூஜைகள் செய்து வழிபட்டனா். இதில் உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும், தங்களது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு வேண்டியும் பெண்கள் பிராத்தனை செய்தனா்.

பூஜையின் நிறைவில் மகாதீபாராதனைக்கு பிறகு, பூஜையில் வைக்கப்பட்ட ப்ருத்வி சிவலிங்கத்தை பெண்கள் கோயில் அருகே உள்ள அமராவதி குளத்தில் விசா்ஜனம் செய்தனா். நாகை, நாகூா், தெத்தி, செல்லூா், பாலையூா், பெருங்கடம்பனூா், பால்பண்ணைசேரி, பொய்கைநல்லூா், தேவங்குடி, திருமருகல், திருப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 1008 பெண்கள் பங்கேற்றனா்.

மாறாந்தை ஹோலி கிராஸ் பள்ளியில் ஆண்டு விழா

வந்தே மாதரம் சைக்களோ மாரத்தான் குழுவுக்கு வரவேற்பு

ரோகிணி பொறியியல் கல்லூரியில் ரோபோட்டிக்ஸ் - 2026 போட்டிகள்

சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

நாகா்கோவில் கோணம் அரசுக் கல்லூரியில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT