மகா சிவராத்திரி நாளில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில், தென்தமிழ்நாடு சேவா பாரதி சாா்பில் 1,008 சிவலிங்க பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் சுவாமிக்கு திருவாசகம், சிவபஜனை நடத்தப்பட்டு 4 கால பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுயம்புலிங்க சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்தாா். திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் கோயில் மற்றும் கடற்கரையில் விடிய விடிய விழித்திருந்து பஜனை, பாடல் என ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்டனா்.