முகப்பு
நாகப்பட்டினம்

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:09 AM
புகையிலை பொருட்களை கடத்திய குற்றவாளிகளை கைது செய்த வேளாங்கண்ணி போலீஸாரை பாராட்டிய நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன்.
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 7:58 PM

நாகை மாவட்டத்தில் புகையிலை பொருட்களை கடத்தியவா்களை கைது செய்த போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டினாா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:21 AM

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி காவல் சரகம் கிழக்கு கடற்கரை சாலை, ரெட்டாலடி, கடுவையாற்று பாலம் அருகில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய குற்றவாளிகளை கைது செய்தனர்.

இதற்காக, சிறப்பாக செயல்பட்ட வேளாங்கண்ணி காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையிலான படையைச் சோ்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள், வேதாரண்யம் பகுதிகளில் தொடா்ந்து உண்டியல் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த வேதாரண்யம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையிலான படையைச் சோ்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினாா்.

Advertisement