காரைக்கால்

அட்சய திருதியை: பெருமாள் கோயில்களில் நாளை உதய கருட சேவை

DIN

அட்சய திருதியை முன்னிட்டு, காரைக்கால் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் உதய கருட சேவை சனிக்கிழமை (ஏப். 29) நடைபெறவுள்ளது.
இதையொட்டி, காரைக்காலில் உள்ள ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு உதய கருட சேவை நடைபெறுகிறது. கருட வாகனத்தில் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் வீதியுலா புறப்பாடு செய்யப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் பெருமாளுக்கு வெண்பட்டு சாற்றி வழிபாடு செய்தவது சிறப்பு என கோயில் நிர்வாகத்தார் தெரிவிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. இதேபோன்று திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ வீழி வரதராஜபெருமாள், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்களிலும் கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகங்கள் செய்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT