காரைக்கால்

காரைக்கால் புறவழிச்சாலைக்கு உள்ளூரை சேர்ந்த புகழ்பெற்ற தலைவர் பெயரைச் சூட்ட வலியுறுத்தல்

DIN

காரைக்கால் புறவழிச்சாலைக்கு மு.கருணாநிதி பெயர் சூட்டப்படும் என அறிவித்ததைத் திரும்பப்பெற்று, உள்ளூரை சேர்ந்த புகழ்பெற்ற தலைவர் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவனை, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலர் செ.மரிஅந்துவான் உள்ளிட்ட நிர்வாகிகள் சனிக்கிழமை சந்தித்து புதுச்சேரி முதல்வருக்கு அனுப்பும் வகையிலான மனுவை அளித்தனர்.
இந்த மனுவின் விவரம் : காரைக்காலில் அமைக்கப்பட்டுவரும் மேற்குப் புறவழிச்சாலைக்கு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த குறிப்பாக காரைக்கால் மண்ணின் மைந்தரான மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஓ.எச்.ஃபாரூக் மரைக்காயர் போன்ற தலைவர்கள் பலர் உள்ள நிலையில், இதுகுறித்து பரிசீலித்து காரைக்கால் புறவழிச்சாலைக்கு பெயர் வைக்க முன்வரவேண்டும். கருணாநிதி பெயரில் தமிழகத்தில் பல கல்வி நிலையங்கள், சாலைகளுக்கு பெயர் உள்ளதால், இந்தக் கோரிக்கையை புதுச்சேரி அரசு பரிசீலித்து, காரைக்கால் மக்கள் வரவேற்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT