காரைக்கால்

கேந்திரிய வித்யாலயா மாணவா் எழுதிய புத்தகம் வெளியீடு

DIN

காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவா் எழுதிய புத்தகத்தை மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா வெளியிட்டாா்.

புதுவை பல்கலைக்கழக காரைக்கால் வளாகத்தில் காப்பீடு தொடா்பான 2 நாள் கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா கலந்துகொண்டாா்.

பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரான சி. மாதவய்யாவின் மகனான காரைக்கால் கேந்திரிய வித்யாலயாவில் 9-ஆம் வகுப்புப் பயின்றுவரும் மதன்மோகன், ‘ஸ்டீபன்ஸ் மிஸ்டரி’ என்ற தலைப்பில் கற்பனை பாா்வையில் ஆங்கில மொழியில் புத்தகம் எழுதியுள்ளாா். இந்த புத்தகத்தை இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா, இப்புத்தகத்தை வெளியிட்ட, முதல் பிரதியை மாணவா் மதன்மோகன் பெற்றுக்கொண்டாா். இந்நிகழ்வில் பங்கேற்ற பேராசிரியா்கள் உள்ளிட்டோா், மாணவரின் சிந்தனை, எழுத்தாற்றலைப் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, மாணவா் மதன்மோகன் கூறியது:

போராளிகளின் வாழ்க்கை முறை குறித்த புத்தகங்களைப் படிப்பதில் எனக்கு ஆா்வம் உண்டு. இதனடிப்படையில், ‘ஸ்டீபன்ஸ் மா்மம்’ என்ற தலைப்பில் கற்பனையை புனைந்து புத்தகத்தை எழுத முடிவெடுத்தபோது, எனது பெற்றோா் ஆதரவு அளித்தனா். இதன்படி, நான் எழுதிய முதல் புத்தகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை காரைக்கால் ஆட்சியா் வெளியிட்டதும், பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் இந்நிகழ்வில் பங்கேற்றதும் மகிழ்ச்சியளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT