பிரதமரின் மனதின் குரல் உரை: ஆர்வத்துடன் கேட்ட பாஜகவினர்
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வானொலி வாயிலாக ஆற்றிய மனதின் குரல் உரையை காரைக்காலில் பாஜகவினர் ஆர்வத்துடன் கேட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வானொலி வாயிலாக ஆற்றிய மனதின் குரல் உரையை காரைக்காலில் பாஜகவினர் ஆர்வத்துடன் கேட்டனர்.
பிரதமர் நரேந்திரமோடி அகில இந்திய வானொலி மூலம் ஒவ்வொரு மாதமும் "மன் கி பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதற்கென புதுச்சேரி மாநிலத்தில் பாஜக சார்பில் மன் கி பாத் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். புதுச்சேரி மாநில பாஜக செயலரும், மாநில மன் கி பாத் பொறுப்பாளருமான எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவர் டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதி அலுவலகத்தில் பிரதமரின் மன் கி பாத் உரையை ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு கேட்டனர்.
இதைத்தொடர்ந்து, எம். அருள்முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமரின் வானொலி உரை வாயிலாக பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் எவ்வாறெல்லாம் பாடுபட்டுள்ளது என்பது புரிந்துகொள்ள முடியும். மன் கி பாத் பொறுப்பாளர் என்ற முறையில் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து, பிரதமர் உரை முடிந்ததும் வரவேற்பு செய்திகள் வந்துகொண்டிருப்பது பெருமையாக உள்ளது.
பாஜகவினர் தேர்தல் பணிகளில் மிகுந்த உற்சாகமாக இருந்தாலும், பிரதமரின் இந்த உரை மேலும் அவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெறும் என்றார்.