காரைக்கால்

அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அடையாளம் தெரியாத நபர் சாவு

DIN

காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநள்ளாறு காவல் சரகத்துக்குள்பட்ட அருள்மிகு சீதாளதேவி மாரியம்மன் கோயில் அருகில் கடந்த டிச. 27-ஆம் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவ ர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அவரை போலீஸார் மீட்டு, காரைக்கால்அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் யார் என்பது தெரியவரவில்லை.
இந்நிலையில், அந்த நபர் சிகிச்சைப் பலனின்றி ஜன.4-ஆம் தேதி உயிரிழந்தார். 153 செ.மீ. உயரமுள்ள அந்த நபர், கருப்பு மற்றும் வெள்ளை நிற தலைமுடி, மாநிறம், வட்டவடிவமான முகாம், 2 கால் முட்டிகளிலும் தழும்பு ஆகிய அடையாளங்களுடன் இருந்தார். நீல நிற கோடு போட்ட அரைக் கை சட்டை, நீலம் மற்றும் வெள்ளை நிற கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தார்.
இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் திருநள்ளாறு காவல்  நிலையத்துக்கு 04368-236465 என்ற  தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT