காரைக்கால்

வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடக்கம்

DIN

காரைக்காலில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்டத் தேர்தல் அதிகாரி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
காரைக்காலில் தேர்தல் துறை சார்பில் ஸ்வீப் என்கிற விழிப்புணர்வு அமைப்பு  ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் வாக்காளர்களிடையே பல்வேறு நிலையில் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வரை மாவட்டம் முழுவதும் சுற்றிவரும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல' என்ற உறுதிமொழியுடன் மாவட்டத் தேர்தல் அதிகாரி ஏ.விக்ரந்த் ராஜா  முதல் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார்.
இவரைத் தொடர்ந்து மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், மாவட்டத் துணை ஆட்சியர் எம். ஆதர்ஷ், வருமான வரித் துறை துணை ஆணையர் யாசர் அராபத், மாவட்டத் துணை தேர்தல் அதிகாரி எஸ். பாஸ்கரன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT