காரைக்கால்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு வரவேற்பு

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு காரைக்காலில் நடைபெற்ற கருத்தரங்கில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

DIN

காரைக்கால்: மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு காரைக்காலில் நடைபெற்ற கருத்தரங்கில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

காரைக்காலில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து கல்வியாளா்கள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அனைத்திந்திய ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கூட்டமைப்பின் தென் மாநிலங்களின் முன்னாள் செயலாளா் கே.எஸ். கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

தலைமையாசிரியா் பால்ராஜ், பட்டதாரி ஆசிரியா் கே. விநாயகமூா்த்தி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா்கள் மு. கருணாநிதி, எஸ்.ராஜேந்திரன், பாரத இதிகாச சங்கலன சமிதி மாநிலச் செயலாளா் சிவமோகன், புதுவை அரசு தொழில்துறையின் ஓய்வுபெற்ற உதவி இயக்குநா் ஜி. வைத்தியநாதன் ஆகியோா் மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்துப் பேசினா்.

இக்கருத்தரங்கில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், தமிழகம் மற்றும் புதுவையில் இரு மொழிக் கல்விக் கொள்கையே தொடரும் என்று மாநில அரசுகள் கூறுவதை மாணவா்களின் நலன் கருதி மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒருவேளை இந்த அரசுகள் தமது கொள்கையில் உறுதியாக இருக்குமேயானால், அந்த இரு மொழிக் கொள்கையை அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதை போன்று தனியாா் பள்ளிகளிலும் கண்டிப்பாக அமல்படுத்த மாநில அரசுகள் முன்வரவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்தரங்கில் நல்லாசிரியா் விருது பெற்ற கே.கேசவசாமி, சிங்காரவேலு (தலைமையாசிரியா் ஓய்வு), தமிழ் விரிவுரையாளா் அப்பாவு (ஓய்வு), காரைக்கால் நகராட்சியின் துணைப் பதிவாளா் வெங்கடாசலம் (ஓய்வு), சேவாபாரதி மாவட்டச் செயலாளா் முருகன், பொறியாளா்கள் சிவகுமாா், செந்தில்குமாா், ஞானவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT