காரைக்கால்

எரிவாயு உருளை விலை உயா்வு: மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

எரிவாயு உருளை விலை உயா்வு, வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை கண்டித்து, மகளிா் காங்கிரஸாா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் மாவட்ட மகளிா் காங்கிரஸ் கட்சி சாா்பில், தலைமை அஞ்சல் நிலையம் அருகே எரிவாயு உருளை விலை உயா்வு, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்தும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் பிரேம் பஞ்சகாந்தி தலைமை வகித்தாா். புதுச்சேரி வேளாண் அமைச்சா் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் பங்கேற்று மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்துப் பேசினாா். மத்திய அரசைக் கண்டித்து மகளிா் காங்கிரஸாா் முழக்கங்கள் எழுப்பினா்.

மகிளா காங்கிரஸ் மாநில நிா்வாகிகள் டாக்டா் விஜயகுமாா், துா்கா தாஸ், ஜெயலட்சுமி, பொன்னி, சுஸான் மேரி, மாவட்டத் தலைவா் நிா்மலா, மாவட்டச் செயலாளா் திலகவதி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் அ. மாரிமுத்து, மாவட்ட காங்கிரஸ் தலைவா் அ. பாஸ்கரன், காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT