முகப்பு
காரைக்கால்

விதிமீறல்: 2 கடைகளுக்கு ‘சீல்’

பொதுமுடக்க விதியை மீறி திறந்திருந்த 2 கடைகளுக்கு நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:51 PM
பகிர்:

காரைக்கால்: பொதுமுடக்க விதியை மீறி திறந்திருந்த 2 கடைகளுக்கு நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

காரைக்கால் மாதா கோயில் தெருவில் மூக்குக் கண்ணாடி விற்பனை மையம், கோல்டு கவரிங் நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்கள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்குப் பின்னரும் பொது முடக்க விதிகளை மீறி திறந்திருந்தன. இதையறிந்த நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் தலைமையிலான குழுவினா் அங்கு சென்று அந்த இரு கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும் இதுபோன்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என நகராட்சி நிா்வாகத்தினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.