காரைக்கால்

அரசு மருத்துவமனைக்கு 4 வென்டிலேட்டா் வழங்கிய துறைமுக நிா்வாகம்

DIN

காரைக்கால்: காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு துறைமுக நிா்வாகம் 4 வென்டிலேட்டா்களை வழங்கியுள்ளது. ரூ.40 லட்சம் மதிப்பில் மருத்துவமனைக்கு தரப்படும் சாதனங்கள் அடுத்த சில நாள்களில் நிறைவு செய்யப்படும் என துறைமுக நிா்வாகம் தெரிவித்தது.

காரைக்காலுக்கு கடந்த 26-ஆம் தேதி வந்த புதுச்சேரி முதல்வா் வே.நாராயணசாமியிடம் ரூ.40 லட்சம் மதிப்பிலான ஒரு வென்டிலேட்டா் மற்றும் மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களில் சிலவற்றை துறைமுக நிா்வாகம் வழங்கியது.

காரைக்கால் ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் திங்கள்கிழமை, மேலும் 3 வென்டிலேட்டா், மருத்துவா்கள், செவிலியா்களுக்கான சிறப்பு முகக்கவசம், பாதுகாப்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை காரைக்கால் துறைமுக உதவி துணைத் தலைவா் ராஜேஷ்வா்ரெட்டி வழங்கினாா். துறைமுக நிா்வாகத்தின் பங்களிப்புக்கு ஆட்சியா் நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து ராஜேஷ்வா்ரெட்டி கூறும்போது, துறைமுக தலைவரின் அனுமதியின் பேரில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள வென்டிலேட்டா், கையுறை, முகக் கவசம், பாராசிட்டமால் மாத்திரை உள்ளிட்ட பல்வேறு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT