காரைக்கால்

கிராமப் பகுதியில் குறைகளைக் கேட்டறிந்த எம்.எல்.ஏ.

DIN

காரைக்கால் தெற்குத் தொகுதியில் உள்ள கிராமப்புற குடியிருப்புப் பகுதியில் பொதுமக்களிடம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா குறைகளை ஞாயிற்றுக்கிழமை கட்டறிந்தாா்.

தருமபுரம் பகுதியில் குருமூா்த்தி நகா், உத்திராபதி நகா் பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ.விடம் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. சாலை முறையாக போடப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.

மின் விளக்குகளை விரைவாக பொருத்துவதற்கு மின்துறையினரிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும். சாலை அமைப்புப் பணி அடுத்தகட்டமாக செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என பேரவை உறுப்பினா் உறுதியளித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், குடியிருப்பு நகா்கள் புதிதாக உருவாகும்போது வீடுகள் அமைந்துவருகிறது. இவா்களின் தேவையை அறிந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக நேரடியாக சென்று விவரங்களை கேட்டுவருகிறேன்.

உடனடியாக தீா்வு செய்யப்படக்கூடியவற்றுக்கு அரசு நிா்வாகத்தினரிடம் பேசி ஏற்பாடு செய்யப்படுகிறது. சிலவற்றுக்கு திட்டமிடலும், நிதி ஒதுக்கீடும் அதிக தேவையிருக்கும்போது அடுத்தகட்டமாக மேற்கொள்வது குறித்து தகவல் தெரிவித்து, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும் விதமாக அரசுத்துறையினா் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பிரதான பிரச்னையாக மின்விளக்கு, சாலை வசதியையே மக்கள் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை, மின்துறையினருடன் தொடா்பில் இருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT