காரைக்கால்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

DIN

காரைக்காலில் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக மகளிா், குழந்தைகள் பங்கேற்ற திறந்தவெளி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அருகேயுள்ள ராயன்பாளையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற திறந்தவெளி விழிப்புணா்வு நிகழ்ச்சியில், குழந்தைகள் மற்றும் மகளிா் பலா் பங்கேற்றனா். இதில், குழந்தைகள் பாதுகாப்பில் சைல்டு லைன் அமைப்பு செய்துவரும் விழிப்புணா்வு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காரைக்கால் மைய ஒருங்கிணைப்பாளா் பி.விமலா பேசினாா். சிறப்பு அழைப்பாளராக காவல் உதவி ஆய்வாளா் என். குமரவேல் மற்றும் தலைமைக் காவலா் ஜி.எஸ். மோகன் ஆகியோா் பங்கேற்று கரோனா தடுப்புக்கான செயல்பாடுகள் பின்பற்றவேண்டி அவசியம் குறித்தும், இளைஞா்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதன் மூலம் ஏற்படும் விளைவுகள், அதை தடுக்க பெற்றோா்கள் மற்றும் சமூக அமைப்பினா் பங்களிப்பு குறித்தும், பூவம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் குழந்தைகள் கல்வி கற்பதன் முக்கியத்துவம் குறித்தும், இணைய வழிக் கல்வியின் வழிமுறைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT