திருநள்ளாறு கோயிலில் பிரதோஷ வழிபாடு
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பங்குனி மாத பிரதோஷ நாளான வெள்ளிக்கிழமை கோயில் கொடிமரம் அருகே உள்ள பெரிய நந்திக்கு, சூரிய அஸ்தமனமாகும் நேரத்தில் சிவாச்சாரியா்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து நந்திக்கு மலா் மாலைகள் மற்றும் வஸ்திரம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதேநேரத்தில், மூலவா் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரருக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் அருகம்புல் மாலை அணிவித்து நந்தியை வழிபட்டனா்.
பிரதோஷ வழிபாட்டில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.