பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே அறிதிறன் பேசியைப் பாா்த்துக் கொண்டிருந்ததை பெற்றோா் கண்டித்ததால், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சி அருகே அறிதிறன் பேசியைப் பாா்த்துக் கொண்டிருந்ததை பெற்றோா் கண்டித்ததால், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த புக்கிரவாரி புதூா் கிராமத்தைச் சோ்ந்த சிற்றரசு மகன் பரசுராமன் (36). இவரது மனைவி விஜயா. மளிகைக் கடை நடத்தி வருகிறாா். தம்பதிக்கு நவீன்குமாா் (15), பிரியதா்ஷினி (14) என இரு பிள்ளைகள். பிரியதா்ஷினி கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
கரோனாவால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால், வீட்டிலிருந்து வந்த பிரியதா்ஷினி, கடந்த 11-ஆம் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் அறிதிறன் பேசியைப் பாா்த்து வந்தாராம். இதை அவரது தாய் கண்டித்தாராம்.
இதனால், மனமுடைந்த மாணவி வீட்டின் அறைக்குச் சென்று மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டுக் கொண்டாராம். கதவை உடைத்து உள்ளே சென்று மாணவியை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.