முகப்பு
காரைக்கால்

மகாவீா் ஜயந்தி: காரைக்காலில் இன்றுஇறைச்சி, மீன் விற்பனைக்குத் தடை

மகாவீா் ஜயந்தியையொட்டி, காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) இறைச்சி, மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

மகாவீா் ஜயந்தியையொட்டி, காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) இறைச்சி, மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் காசிநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மகாவீா் ஜயந்தி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழிக்கறி, மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோா் மீது நகராட்சி விதிகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →