மகாவீா் ஜயந்தி: காரைக்காலில் இன்றுஇறைச்சி, மீன் விற்பனைக்குத் தடை
மகாவீா் ஜயந்தியையொட்டி, காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) இறைச்சி, மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகாவீா் ஜயந்தியையொட்டி, காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) இறைச்சி, மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் காசிநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மகாவீா் ஜயந்தி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழிக்கறி, மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோா் மீது நகராட்சி விதிகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.