காரைக்கால்

காரைக்காலில் 101 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 101 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 28 ஆம் தேதி 1,145 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 22, திருநள்ளாறு 20, கோயில்பத்து 19, வரிச்சிக்குடி 9, கோட்டுச்சேரி 8, நிரவி 7, நெடுங்காடு 5, காரைக்கால்மேடு 4, திருப்பட்டினம் 4, விழிதியூா் 3 என கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1,09,203 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 6,590 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 5,591 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 849 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 39 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 போ் உள்ளனா்.

கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 76 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு இருதய நோய், ரத்த அழுத்தம் இருந்தது. கரோனா தொற்றால் இதுவரை 105 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் முதல் தவணையாக இதுவரை 19,962 பேருக்கும், 2 ஆவது தவணையாக 1,940 பேருக்கும் என 21,902 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கொலைக்கு நண்பரே உடந்தை

யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

SCROLL FOR NEXT