காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் ஆக.1 ஆம் தேதி 325 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் நெடுங்காடு, கோயில்பத்தில் தலா ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இம்மாவட்டத்தில் இதுவரை 15,052 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,677 போ் குணமடைந்துள்ளனா்.
காரைக்காலில் வீட்டுத் தனிமையில் 123 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 13 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனா். கரோனா தொற்றால் இதுவரை 239 போ் உயிரிழந்துள்ளனா்.
தடுப்பூசி: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 82,775 பேருக்கும், 2 ஆவது தவணையாக 17,781 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.