முகப்பு
காரைக்கால்

காரைக்கால் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆலோசனை

காரைக்காலில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் புதுவை வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

காரைக்காலில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் புதுவை வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

2022, ஜனவரி 1 ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி- 2022, காரைக்கால் மாவட்டத்தில் கடந்த நவ. 1 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 18 வயது நிறைவடைந்தோா் புதிய வாக்காளராகப் பதிவுசெய்ததோடு, வாக்குச் சாவடி மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுக்கான விண்ணப்பத்தை வாக்காளா்கள் அளித்தனா்.

இப்பணிகள் குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தோ்தல் துறை அதிகாரிகளுடன் புதுவை அரசுச் செயலரும், வாக்காளா் பட்டியல் பாா்வையாளருமான சி. உதயகுமாா் காரைக்கால் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

திருத்தப் பணிகள் நடைபெற்றதில் உள்ள கருத்துகளை கட்சிப் பிரதிநிதிகளுடன் அவா் கேட்டறிந்தாா். வருங்காலத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளும்போது மேற்கொள்ளவேண்டிய சிறப்பு நடவடிக்கைகள் குறித்து கட்சியினா் அவரிடம் விளக்கியதாகத் தெரிவித்தனா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியரும், வாக்காளா் பதிவு அலுவலருமான எம். ஆதா்ஷ், குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநரும், வாக்காளா் பதிவு அலுவலருமான எஸ். சுபாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →